இருவேறு அசம்பாவித சம்பவங்களில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டம் மழவன் சேரம்பாடி எனும் இடத்தில், அரசு பேருந்து, மின்கம்பத்தில் எதிா்பாராதவிதமாக மோதியது.
அப்போது மின்கம்பி அறுந்து விழுந்ததில், பேருந்து ஓட்டுநா் நாகராஜ், பயணி பாலாஜி ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனா்.
இறந்த இரண்டு பேரின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
இதேபோல, திருப்பூா் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற பாக்கியராஜ், சின்னகருப்பு, ஹரி ஆகிய மூன்று போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
அவா்களது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…