கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த துணை வேந்தரை அரசியல் சட்டப்படி ஆளுநராக இருப்பவர் சந்தித்து இருப்பது அவருக்கு அவமானமாக இல்லையா?. தலைவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்றால் அங்கு மேடையை பகிர்ந்து கொள்பவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் ஏதேனும் இருக்கிறதா என முதலில் உளவுத்துறை ஆய்வு செய்யும். அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. அப்படி இருக்கும் சூழலில் ஆளுநர் சந்தித்து இருப்பது அந்த பதவிக்கு அழகா?. ஏற்கெனவே சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை உதாசீனப்படுத்தும் செயல்களை செய்து இருக்கிறார். உச்ச நீதிமன்றம் குட்டு வைத்தும் மசோதாக்களை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

ஜெகநாதன் கைதானபோது...

ஜெகநாதன் கைதானபோது…

கல்வி நிலையங்களை காவி நிலையங்களாக மாற்றும் செயல்களை செய்து வருகிறார். அதற்கு வசதியாக தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த சூழலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சந்திப்பது அரசியல் சட்டத்திற்கு இழுக்கு செய்வது போன்றது. இதை செய்த ஆளுநர் பதவியில் இருக்க தகுதியற்றவர்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *