அமெரிக்கா தலைமையில் உருவான நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதை எதிர்த்த ரஷ்யா, கடுமையாக எதிர்வினையாற்றியது. அதைத் தொடர்ந்தே ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி இன்றளவும் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு நேட்டோவில் ஸ்வீடன் நாடு இணைந்ததற்குத் தீவிரமான எதிர்வினைகள் எதிர்பார்க்கப்பட்டது. உக்ரைனில் நடந்து வரும் ரஷ்ய ஆக்கிரமிப்புகளையும் கவனத்தில் கொண்ட ஸ்வீடன், போர் சூழலை எதிர்கொள்ளும் எனக் கருதுகிறது.
அதை உறுதி செய்யும் விதமாகக் கடந்த வார இறுதியில் சாலனில் நடைபெற்ற ஸ்வீடனின் வருடாந்திர சமூகம் மற்றும் பாதுகாப்பு (“ஃபோக் ஓச் ஃபோர்ஸ்வர்’) மாநாட்டில் பேசிய சிவில் பாதுகாப்பு அமைச்சர் கார்ல்-ஆஸ்கர் பொஹ்லின் (Carl-Oskar Bohlin), “ஏறக்குறைய 210 ஆண்டுகள் அமைதியைத் தோழனாகக் கொண்டிருக்கும் ஸ்வீடன் தேசம் போரை எதிர்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. 1814-ல் அண்டை நாடானா நோர்வேயுடன் ஒரு போரை எதிர்கொண்டது.