![கோப்புப்படம் ratinam](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2024/1/10/original/ratinam.jpg)
கோப்புப்படம்
சென்னை தீவுத்திடலில் 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 12-ல் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் கீழ் அமைந்துள்ள தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டும் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீவுத்திடலில் நடைபெறும் இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஜன.12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கிவைக்கிறார். பொதுமக்கள் ஜன. 12 மற்றும் ஜன. 13 ஆகிய தேதிகளில் கட்டனமின்றி பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ராகுல் காந்தி நடைப்பயணத்துக்கு மணிப்பூர் அனுமதி!
சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஜன. 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…