நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு ஆஜராக நின்று கொண்டிருந்த போது, செல்வசதீஷ், திடீரென கழிவறைக்கு செல்ல வேண்டும் என தன்னை அழைத்து வந்த போலீஸாரிடம் கூறியுள்ளார்.  இதனையடுத்து  நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் செல்ல போலீஸார் அனுமதித்துள்ளனர். கழிவறைக்குள் சென்ற செல்வசதீஷ், நீண்டநேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் வெளியில் நின்ற போலீஸார் கதவை தட்டியுள்ளனர். ஆனால், எந்தவித சத்தமும் இல்லாததால், அதிர்ச்சியடைந்த போலீஸார்,  கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, உள்ளே செல்வசதீஷ் இல்லை. கழிப்பறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.

தூத்துக்குடி நீதிமன்றம்

தூத்துக்குடி நீதிமன்றம்

செல்வசதீஷ், ஜன்னல் வழியாக வெளிப்புறம் உள்ள முட்புதருக்குள் குதித்து தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து பாதுகாப்புக்கு சென்ற போலீஸார், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய செல்வசதீஷ் என்ற சூபியை தீவிரமாக தேடி வருகின்றனர். கழிப்பறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கைதி தப்பி சென்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *