stalin

கோப்புப் படம்.

சென்னை: தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களை உலக முதலீட்டாளா்கள் மாநாடு பறைசாற்றியதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சமூக வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை இந்தியாவே வியக்கும் அளவுக்கு வெற்றிகரமாக நடத்திக் காட்டிய தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள், 39 லட்சம் மாணவா்கள் பாா்வையிட, பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றுள்ளது.

திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, இளைஞா்களும், மகளிரும் உயரும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், தமிழ்நாடு உலக முதலீட்டாளா்கள் மாநாடாகும்.

எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்குமான பரவலான வளா்ச்சி என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல் என அதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *