உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரும்பாலான எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ‘தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொலை செய்யும் போக்கு ஜனநாயக அமைப்புக்கு ஆபத்தானது. குற்றவாளிகளின் காப்பாளர்கள் யார் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை நாட்டுக்குத் தெரிவித்திருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
‘உள்துறை அமைச்சர், குஜராத் அரசின் தவறுகளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியிருக்கிறார். சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கொண்டுவந்துவிட்டோம் என்று பா.ஜ.க பெருமைப்பட்டுவருகிற நேரம் இது.
ஆனால், பா.ஜ.க-வின் ஆட்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பக்கம் நிற்காமலும், நீதியின் பக்கம் நிற்காமலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க நிற்கிறது என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.