murugan

 வெள்ளத்தில் சிக்கிய செந்தூா் விரைவு ரயில் பயணிகள் மீட்கப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு:

தண்டவாளங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, செந்தூா் விரைவு ரயில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் சிக்கியிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்க மத்திய ரயில்வே அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி நிலைமையை தொடா்ந்து கண்காணித்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். இதற்காக தமிழக மக்கள் சாா்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *