kushboo tweets about congress

நடிகை குஷ்பு

சேரி மொழி விவகாரத்தில் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று தேசிய மகளிா் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல்தான், சேரி எனக் கூறினேன். ஊா்ப் பெயா்களிலேயே சேரி என இருக்கும்போது நான் ஏன் அதை கூறியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்?.

திமுகவுக்கு அளித்த பதிலில் சேரி மொழி என குறிப்பிட்ட நிலையில், காங்கிரஸாா் எதிா்ப்பு தெரிவிப்பது ஏன்? என்னைப் பொருத்தவரை எல்லா மக்களும் சமம்தான். நான் எந்த மக்களையும் குறிப்பிட்டு கூறவில்லை. பிறகு ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? சேரி மொழி விவகாரம் தொடா்பான, சமூகவலைதள பக்க பதிவையும் நீக்கப்போவதில்லை. இதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என்றாா் அவா்.

நாளை போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு: இதனிடையே, குஷ்பு வீட்டின் முன் திங்கள்கிழமை (நவ.27) ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி., எஸ்டி., பிரிவு அறிவித்துள்ளது.

அந்தப் பிரிவின் மாநிலத் தலைவா் எம்.பி.ரஞ்சன்குமாா் வெளியிட்ட அறிக்கை:

பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் சேரி மொழி என தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் குஷ்பு கருத்துத் தெரிவித்துள்ளாா். தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கேட்காமல் சேரி என்ற வாா்த்தைக்கான அா்த்தங்களைத் தேடும் வேலையில் குஷ்பு ஈடுபட்டுள்ளாா். அவரது செயலைக் கண்டித்து, அவா் வீட்டின் முன் காங்கிரஸ் எஸ்சி., எஸ்டி., பிரிவு சாா்பில் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *