இந்தத் திட்டத்துக்காக மட்டும் மாதம் 2,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது அம்மாநில அரசு, இதன் மூலம் 1.2 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனும் பயனாளராகச் சேர்க்கப்பட்டு மாதம்தோறும் ரூ.2000 பெறுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
முன்னதாக கர்நாட மாநில மேலவை உறுப்பினரும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு துணை தலைவருமான தினேஷ் கூலிகவுடா, அம்மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனையும் குருஹ லட்சுமி திட்டத்தில் சேர்க்க வேண்டும், அவருக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்ற துணை முதல்வர் சாமுண்டீஸ்வரி அம்மனையும் திட்டத்தில் சேர்த்துள்ளார்.
இப்போது சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் மாதம் ரூ.2000 அனுப்பிவைக்கப்படுகிறது.