கடலூர்: தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள் ளதால், கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் எதிரே உள்ள கும்தாமேடு தரைப் பாலம் மூடப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றில், நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை மற்றும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் காரணமாக கடந்த சிலநாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணையாற்றில் தற்போதுதண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இங்குள்ள கும்தாமேடு பகுதியில், கடலூர் மாவட்டத்தை புதுவை பகுதியோடு இணைக்கும் வகையில் தடுப்பணையுடன் கூடிய தரைப் பாலம் அமைக் கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மீது செல்லும் தண்ணீரின் அளவு தற்போது அதிகரித்து வருகிறது. இதை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். ஆபத்தை உணராத இப்பகுதி மக்கள் இந்தபாலத்தின் வழியாக செல்கின்றனர். அந்த கரையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு கடலூரில் இருந்து மது பிரியர்கள் சென்று வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது செல்லும் போது, பாலத்தில் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் உள்ளது. ஆண்டு தோறும் இந்த பாலத்தில் நடைபெறும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *