புதுக்கோட்டை சாந்தநாதர் சுவாமி தெருவில் வாகனங்கள் நிற்கும் பகுதியை மட்டும் விட்டு விட்டு தார் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை நகர பகுதிகளில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கீழ ராஜவீதி அருகே சாந்தாரம்மன் கோயில் முன்பு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், பணியாளர்கள் வாகனங்கள் நின்ற இடத்தை தவிர்த்து மற்ற பகுதிகளில் சாலை அமைத்துவிட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல்வேறு இடங்களில் சாலைகள் முறையாக அமைக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வரும் சூழலில் புதிய சாலை போடும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை கூட அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு சாலை அமைக்காமல், வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு புதிய சாலை அமைத்துள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

இதையும் படிங்க; தொடர்புகொள்ளமுடியாத 8 தமிழக பயணிகள்… உறவினர்கள் தகவல் தர கோரிக்கை

மேலும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *