சென்னை: மூன்று பெரும் ஒவியர்களுக்கு சென்னையில் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. ஏப். 12-ம் தொடங்கி 11 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் ஓவியக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
‘ஓவிய மன்னர்’ கே.மாதவன், ‘ராஜபாட்டை’ ஆர்.மாதவன், ஆர்.நடராஜன் ஆகிய மூன்று முதுபெரும் ஓவியர்களுக்கு சென்னையில் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது.