Erode East By Election 2023: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமானதையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்நிலையில் இந்த தொகுதியில் மீண்டும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (21/01/2023) முதல் திமுக – காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தினை தொடங்கிய நிலையில், இன்னும் வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

news reels

மகனுக்காக விட்டுக்கொடுத்த ஈவிகேஎஸ்

இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட காங்கிரஸ் கமிட்டி விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், தனது வயது மூப்பு மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு தனது இளைய மகன் சஞ்சய் போட்டியிடட்டும் என தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை தனது மகனுக்கு விட்டு கொடுத்துள்ளார். இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர் தேர்வை தேசிய தலைமையின் ஒப்புதலுக்காக காங்கிரஸ் தலைமையிடத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *