அதனைத் தொடர்ந்து, நேற்று கள்ளை மற்றும் தொப்பாநாயக்கன்பட்டி சேர்ந்த மக்கள், தைப் பொங்கலை முன்னிட்டு ஆண்கள் கையில் குச்சியுடன் மேல் சட்டை அணியாமல் வந்திருந்தனர். அப்போது, தாங்கள் வளர்த்து வரும் சாமி மாடுகளுடன் மாலையம்மன் கோயிலுக்கு வந்து, சாமி மாடுகளுக்கு சந்தனம் பூசி, சாமியை வழிபாடு செய்தனர். சாமி மாடுகளை சிறிது தூரம் ஓடச் செய்து, மாலை தாண்டும் நிகழ்ச்சி நடத்தினர்.
![கோமாளி ஆட்டம்](https://gumlet.vikatan.com/vikatan%2F2023-01%2F3adf8fee-0a10-49dd-a516-9992061b32e4%2Fkomali_aattam.jpg?auto=format%2Ccompress)
அதன்பிறகு, தங்களின் பாரம்பர்ய நடனமான தேவராட்டம், ஒயிலாட்டம் மற்றும் கோமாளி ஆட்டம் ஆடினர். அதேபோல், பேரூர் மற்றும் குப்பமேட்டுபட்டியைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு ஒதுக்கபட்ட நேரத்தில் சாமி மாடுகளுடன் வந்து மாலையம்மனை அதே நடைமுறையில் வழிபாடு செய்தனர். 28 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன சாமி சிலை கிடைத்தது மற்றும் தடைப்பட்ட திருவிழா நடந்ததால், தங்கள் கிராமங்களில் இனி செல்வச் செழிப்பு தழைத்தோங்கும், விவசாயம் செழிக்கும் என இரண்டு கிராம மக்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.