ஓசூர்:

அண்ணாநகரில் தாய் – மகள் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஓசூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓசூர் அண்ணாநகர் ஜெய்சங்கர் காலனியில் வசித்து வருபவர் மெக்கானிக் மகபூப்பாஷா. இவர் பேரண்டபள்ளி என்ற இடத்தில் எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நூர்ஜான் (38), மகள் மோசின்ஜான் (17).

10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள மோசின்ஜான் கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று படித்து வந்துள்ளார்.

மகபூப்பாஷா நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில், நூர்ஜானும் அவரது மகள் மோசின்ஜானும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை (Suicide) செய்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஒசூர் நகர காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் (TN Police) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் மகள் இருவரும் தூக்குப்போட்டு உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *