சேலம்:

உலகம் முழுவதும் அதிக அளவில் பரவி வருகிறது தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதன் படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது மற்றும் இரவு நேரங்களில் 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன மற்றும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. நோய்களின் பரவுவதற்கு முக்கியமான ஒன்றான பெரும்பாலானோர் மாஸ்க் அறிவதில்லை இதன் காரணமாக நோய் தொற்று அதிக அளவில் ஏற்படுகிறது.

இதை அடுத்து சேலத்தில் முகக் கவசங்கள் அணிந்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்த அதனடிப்படையில் சேலத்தில் வாகனங்கள் மாஸ்க் அணியாமல் சென்ற 647 வழக்கு செய்ய பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு முழு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் இரவு 10 மணிக்குள் கடைகளை அடைக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மாநகர காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *