டெல்லி:

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.81 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.48 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 22,775 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,61,579 ஆக உயர்ந்தது.

* புதிதாக 406 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,81,486 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,949 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,75,312 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,04,781 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 98.32% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.30% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 1,45,16,24,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 58,11,487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *