சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் தேடுகிறது. சென்னை, மதுரையில் தனிப்படைகள் முகாமிட்டுள்ள நிலையில் பெங்களூரு சென்றுள்ளது மேலும் ஒரு குழுவினர்.