இந்தியாவில் 2022 பிப்ரவரி கொரோனா 3ஆம் அலை துவங்கும் என்று தேசிய கொரோனா ஆய்வு குழு தலைவர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். ஆனால் அலையின் பாதிப்பு 2ஆம் அலையை விட குறைவாக இருக்கும் என்று கூறிய அவர், ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் உயரும் என்றும், இந்தியாவில் 3ஆம் அலை நிச்சயம் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.