ஒமிக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து, தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம் எழுதியுள்ள கடிதத்தில், அக்கடிதத்தில்,

தமிழகத்தில் இதுவரை 28 பேருக்கு ஒமைக்ரான் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் அதில் 4 பேர் மட்டுமே கூடுதல் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், மீதமுள்ள 24 பேர் குறைவான பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தோர் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இனி, அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அப்படி செய்ததால் தான் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து வெளிநாட்டு பயணிகளும் வீட்டில் அல்லது அரசு அமைத்துள்ள மையங்களில் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பதோடு, 8வது நாளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *