தமிழகத்தில் மீன்களின் விலையும், கட்டுமான பொருட்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது என்று ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று கூறிய அவர், இதை மாநில அரசின் பொறுப்பு என்று சுட்டிக்காட்டி, இதில் முதல்வர் தனது கவனத்தை செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.