குண்டாஸில் சதமடித்த திண்டுக்கல் மாவட்ட. காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள்..
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறார்.
திருட்டு, கொள்ளை வழக்கு 9, ரவுடிகள் வழக்கு 65, கஞ்சா, புகையிலை வழக்கு 16, பாலியல் வழக்கு 11 உள்ளிட்ட 101 வழக்குகளில் தொடர்புடையவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பரிந்துரையால் குண்டர் சட்டம் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.