கோவை: கேரள அரசை கண்டித்து வரும் 13-ம் தேதி சின்னாறு சோதனைச்சாவடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக்கூட்டம் கோவை காந்திபுரத்தில் உள்ள ஹோட்டல் அரங்கில் மே 25 நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கி விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.