ஹைப்பர்லிங்க் பாணியிலான கதையை எழுதியுள்ள இயக்குநர் முருகன், அதை நோக்கி நகர்வதற்காகவே மொத்த திரைக்கதையையும் வலுக்கட்டாயமாக வடிவமைத்துள்ளார். அது கதாபாத்திரங்களைப் பற்றிய எந்தத் தெளிவையும் சரியாகத் தராமல், எந்தவித சுவாரஸ்யமான உணர்வையும் ஏற்படுத்தாமல் குழப்பத்தையே பிரதான உணர்வாக விட்டுச் செல்கிறது. இந்த உணர்வோடு சிரிப்பே வராத அபத்த நகைச்சுவைகள், தேவையில்லாத கடத்தல் காட்சிகள், எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகள் என இருளில் நகரும் மொத்த படமும் கடைசி வரையில் வெளிச்சத்துக்கே வரவில்லை.
![பகலறியான் விமர்சனம்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2F94813d5c-b6b4-4e85-92fe-cbd4827fe233%2Fpagal.jpg?auto=format%2Ccompress)