அதன்படி அபிராமி அம்மன் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு 54 ஆண்டுகளுக்குப் பிறகு மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டைக் குளத்தில் தெப்பத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகிகள் செய்தனர்.
![தெப்பத்திற்கு அழைத்துவரப்பட்ட அம்மன்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2Fbf615087-8c04-4251-b84c-3d75a00c4f81%2FIMG-20240523-WA0007.jpg?auto=format%2Ccompress)
தெப்பத்தினுள் மலர்களால் அலங்கரிங்கப்பட்ட தேரில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் வீற்றிருக்க, தெப்பத்தின் வெளிப்புறம் இருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலை முதல் கனமழை பெய்தபோதும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் தெப்பத்திருவிழா என்பதால் திண்டுக்கல் மட்டுமில்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் சென்றனர்.