தமிழில் ‘வாலி’ படம் மூலம் அறிமுகமாகிப் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களைச் சம்பாதித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இதையடுத்து மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்தாலும் பாலிவுட் பக்கம் அவர் செல்லவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம்தான் மீண்டும் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் ‘சைத்தான்’ படத்தையடுத்து மற்றொரு பாலிவுட் திரைப்படமான ‘ஶ்ரீகாந்த்’திலும் நடித்துள்ளார். அது தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு குறித்தும் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்காமலிருந்தது குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கும் ஜோதிகா, “எனது ஆரம்பக் கால சினிமா வாழ்வில் தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு எனக்குப் பாலிவுட்டில் கிடைக்கவில்லை. பாலிவுட்டில்தான் நான் முதன்முதலில் அறிமுகமானேன். என் முதல் பாலிவுட் படத்தில் எனக்குச் சரியாக வரவேற்பு கிடைக்கவில்லை. பாலிவுட்டைப் பொறுத்தவரை ஒரு படம் ஹிட்டானால்தான் மறுபடியும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஃபார்முலா இருக்கிறது.