மகாராஷ்டிராவில் இன்று கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் இன்று காலையில் இருந்து மக்கள் உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் மும்பையில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள். சில வாக்குச்சாவடியில் நிழலுக்காக பந்தல் போடப்பட்டு இருந்தது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர் சிங் துணையுடன் பாந்திராவில் வாக்களித்தார். தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பிறகு இப்போதுதான் வெளியில் வந்தார். அவரை பாதுகாப்பாக கணவர் ரன்வீர் சிங் வாக்குச்சாவடிக்குள் அழைத்து சென்றார். தீபிகாவுக்கு வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. அவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
நடிகர் தர்மேந்திரா தனியே வந்து வாக்களித்தார். அவரின்மனைவி ஹேமாமாலினி தனது மகள் ஈஷா தியோலுடன் வந்து வாக்களித்தார். நடிகர் சுனில் ஷெட்டி, ஆமீர்கான் மகள் இரா கான், ஜுனைத் கான், தயாரிப்பாளர் டேவிட் தவான், நடிகர் வருண் தவான், தயாரிப்பாளர் போனி கபூர், அவரது மகள் குஷி கபூர் ஆகியோரும் பிற்பகலுக்குள் வாக்களித்தனர். இது தவிர மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ராஜ் தாக்கரே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். நடிகை கெளகர் கான் வாக்களிக்க வந்தார். ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் அவருன் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88