கருடபுராணம் பகவான் விஷ்ணுவால் அருளப்பட்டது. கருடன் பகவான் விஷ்ணுவிடம் மரணத்துக்குப் பின்னான உயிர்களின் பயணம் எப்படிப்பட்டது என்பது குறித்த கேள்விகளுக்கான விடைகளாக அமைந்தது. இது மரணம் பற்றிய முன்னெச்சரிக்கை அல்ல. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த வழிகாட்டும் புராணம்.