மதியம் 2.30 மணிக்கு உச்ச பூஜையும், பொங்காலை நிவேத்யமும், தீபாராதனையும் நடைபெற்றது. கோயில்வளாகத்திலும், சாலைகளிலும், தெருக்களிலும் பொங்கலிட்ட பெண்களின் பொங்காலைகளில் புண்ணிய தீர்த்தம் தெளிக்க நூறுக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் நியமிக்கப்படிருந்தனர். அவர்கள் தீர்த்தம் தெளித்து பொங்காலையை அம்மனுக்கு நைவேத்யம் செய்தனர். நேற்று இரவு 7.30 மணிக்கு குத்தியோட்டம், சூரன்குத்து ஆகியவை நடந்தன. இரவு 11 மணிக்கு அம்மன் எழுந்தருளல் நடைபெற்றது.

சிறுமிகளின் தாலப்பொலி

சிறுமிகளின் தாலப்பொலி

10-ம் நாள் விழாவான இன்று காலை 8 மணிக்கு அம்மன் கோயிலில் எழுந்தருளல். 8.15 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு உஷபூஜை, 9.45 மணிக்கு உஷ ஸ்ரீபலி, 10.15 மணிக்கு பந்தீரடி பூஜை, 12 மணிக்கு உச்ச பூஜை, தீபாராதனை, 12.30 மணிக்கு உச்சஸ்ரீபலி, மதியம் 1 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.45 மணிக்கு தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு பகவதி சேவை, 8 மணிக்கு அத்தாள பூஜை, தீபாராதனை, 8.15 மணிக்கு அத்தாள ஸ்ரீபலி, 9.45 மணிக்கு காப்பு அவிழ்த்தல், 10.15 மணிக்கு நடை அடைத்தல் மற்றும் பள்ளியுறக்கம் ஆகியவை நடைபெற இருக்கின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு குருதி தர்ப்பணம் நடைபெறும். அதைத்தொடர்ந்து இந்த ஆண்டுப் பொங்காலை  மஹோத்ஸவம் நிறைவு பெறும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *