IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜன. 25) ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஹைதராபாத்திற்கு பிறகு விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய நகரங்களில் முறையே அடுத்து நடைபெற உள்ளது.

விராட் கோலிக்கு சரியான மாற்று

இங்கிலாந்து அணி சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் மேற்கொண்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றை விளையாடியிருந்தது. தற்போது இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை மட்டும் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. 

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடருக்கு, முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டும் 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி (Virat Kohli Replacement) விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், ரஜத் பட்டிதரை (Rajat Patidar) மாற்று வீரராக இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க | இங்கிலாந்து வீரர் விலகல்… விசா கொடுக்காத இந்தியா – கடுப்பில் பென் ஸ்டோக்ஸ்!

சதத்தால் கிடைத்த வாய்ப்பு

இந்திய அணி ஏ அணி சார்பில் ரஜத் பட்டிதர் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்திருந்தார். அவர் இந்திய ஏ அணி இருந்த நிலையில், இன்று ஹைதராபாத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. 

குறிப்பாக, முதுகு பிடிப்பு காரணமாக விலகிய சாய் சுதர்சனுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், ரின்கு சிங்கும் இந்திய ஏ அணியுடன் இணைந்துள்ளார். இந்திய ஏ அணி மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பலம் பெறும் இந்திய மிடில் ஆர்டர்

ரஜத் பட்டிதர் இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். சமீபத்திய ஃபார்மை கணக்கில் வைத்து மட்டுமின்றி விராட் கோலி விலகலால் ஏற்பட்டுள்ள மிடில் ஆர்டர் வெற்றிடத்தை நிரப்பவும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி போன்று ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் தற்போதைய ஸ்குவாடில் இல்லை. துருவ் ஜூரேல், கேஎஸ் பரத் என விக்கெட் கீப்பிங் பேட்டர்களே உள்ளனர். 

ரஜத் பட்டிதர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நிலையில், நாளைய போட்டி மூலம் டெஸ்ட் அணியிலும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மிடில் ஆர்டரில் ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் என்பதால் இவருக்கு இடம் உறுதி என பல வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியாவுக்கு ஸ்பின்னருக்கு பதில் பேட்டர் தேவைப்பட்டால் இவரை எடுக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | IND v ENG: விராட் கோலிக்கு பிறகு மேலும் ஒரு வீரர் விலகல்! பயிற்சியின் போது காயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *