ஒருபுறம் இப்படியிருக்க, மற்றொரு புறம் பயணிகள் அமரும் இடங்கள் இருண்டு கிடக்கின்றன. அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து விளக்குகளும் ஒளிராமல் இருக்கின்றன. வெளிச்சம் இல்லாததால், இருக்கைகள் இருந்தும் பயணிகள் பெரும்பாலும் அவற்றில் அமருவதில்லை‌. அங்கே தரையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம், `இருக்கைதான் இருக்கிறதே, பின்னர் எதற்காக தரையில் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டோம்.

அதற்கு அவர், “உட்கார இடம் இருக்குதான் தம்பி. ஆனா அங்க ஒரே இருட்டா இருக்கு. யாரு வரா போறாங்கனுகூட தெரியல. இங்க பஸ்டாண்ட் பின்னாடியேத்தான் ஒயின் ஷாப்பும் இருக்கு. குடிச்சிட்டு வேணும்னே பக்கத்துல வந்து உட்காருறாங்க. அப்படியிருக்கும்போது அங்கு எப்படி தம்பி உட்கார‌முடியும்… அந்த சேர் (chair) கூட சரியா இல்ல. போல்ட் இல்லையா என்னனு தெரியல… நேத்துக்கூட ஒருத்தவங்க உட்காரும்போது, அப்படியே கவிழ்ந்தடிச்சு விழுந்தாங்க. அதனாலதான், இங்க தரையா இருந்தாலும் சரின்னு வெளிச்சத்துலயே உட்கார்ந்துட்டேன்” என்றார்.

அவர் சொன்னதுபோலவே பேருந்து நிலையத்தின் பல்வேறு இடங்களில் குடித்துவிட்டு சிலர் சென்று கொண்டிருந்தனர். மது பாட்டில்களும் ஆங்காங்கே தென்படவே செய்தன.

பேருந்து நிலையம்

பேருந்து நிலையம்

பேருந்து நிலையத்தின் பிற இடங்களிலும் போதிய வெளிச்சமில்லாமல், இருண்டே காணப்படுகிறது. பயணிகள் நிற்கும் இடங்கள், டூவீலர் பார்க்கிங் ஏரியாவாகவும், அங்குத் திறந்தவெளி கடைகள் வைத்துள்ளவர்கள் பொருள்கள் வைக்கும் இடமாகவும்தான் இருக்கின்றன. மக்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாகவும் பிரச்னைகளைத் தீர்க்கவும், பழைய பேருந்து நிலையத்தைப் புனரமைக்கவும், பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் உள்ள மதுபானக் கடையை அகற்றி, இடமாற்றம் செய்திடவும் அரசு முன்வர வேண்டும் என்பது, பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்குச் செவிசாய்க்குமா மாவட்ட நிர்வாகம்?!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *