இந்த சம்பவத்திற்கு முதல் நாள் மனுதாரரை தன் டூவீலரில் லிஃப்ட் கொடுத்து போலீஸ்காரர் பாண்டி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவே, போலீஸ்காரர் பாண்டி மொபைல் ஆப் மூலம் பணம் பெற்றது குறித்து விசாரித்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

போலீஸ் மாமூல்

போலீஸ் மாமூல்
சித்திரிப்புப் படம்

அரசு தரப்பில் இக்குற்றச்சாட்டு மறுக்கப்பட்ட நிலையில், அனைத்தையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “போலீஸ்காரர் பாண்டி, மனுதாரரின் சகோதரரை போதைப்பொருள் விற்பனை செய்யச் சொல்லி வற்புறுத்தி மாமூல் பெற்றுவந்ததும், மொபைல் ஆப் மூலம் இரண்டாயிரம் ரூபாய் மாமூல் பெற்றதும் தெரியவருகிறது. இது குறித்து உயரதிகாரிகளுக்குத் தெரிந்தும் பணம் பெற்றதை, பாண்டி ஒப்புக்கொண்டுள்ளார். மனுதாரரை முதல் நாள் டூவீலரில் ஏற்றிச் சென்றுள்ளார். கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களுடன் பாண்டிக்கு தொடர்பு உள்ளது நன்றாகத் தெரிகிறது.

தெப்பகுளம் போலீஸ் அதிகாரிகள் இந்தப் புகாரை சரியாக விசாரிக்கவில்லை. மதுரை போலீஸ் கமிஷனர், ஓர் அதிகாரியை நியமித்து இப்புகார் குறித்து 6 வாரங்களில் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *