இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையேயான டி20 தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரோஹித் மற்றும் கோலி அணியில் இடம் பெற்றுள்ளனர்.  விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2வது டி20 போட்டியில் விளையாடினார்.  முதல் டி20 போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விளையாடவில்லை.  2022 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணிக்கு திரும்பி உள்ளனர். இந்திய அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், உலகக் கோப்பைக்கான டி20 அணிக்கு கோலி திரும்பியது குறைக்கும், இந்திய அணியில் விராட் கோலி எதிர்காலம் குறித்தும் பேசி உள்ளார்.

மேலும் படிக்க | லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த விராட் கோலி! வைரலாகும் சிக்ஸர் வீடியோக்கள்

கடைசியாக 2022 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிராக ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்த சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக தவான் விளையாடினார்.  வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில், ஷிகர் தவான் விளையாட உள்ளார்.  பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிக்கு தவான் கேப்டனாக இருப்பார். வைட்-பால் கிரிக்கெட்டில் சிறந்த இடது கை வீரர்களில் ஒருவரான தவான், ரோஹித், விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி ஆகிய மூன்று வெவ்வேறு கேப்டன்களின் கீழ் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். 

கோஹ்லி குறித்து பேசிய தவான்

ஷிகர் தவான் சமீபத்தில் ஒரு நேர்காணலில், இந்திய அணிக்கு சக்திவாய்ந்த வீரராக விராட் கோலி உள்ளார் என்று பாராட்டினார்.  “திறமை கொண்ட இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் தருகிறார், அவர்களுக்கு வெற்றிபெற வாய்ப்பளிக்கிறார். கோலி கண்டிஷனிங் மற்றும் உடல் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அவரது தலைமையின் கீழ், உடல் தகுதிக்கான முக்கியத்துவம் அணி கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக வளர்ந்துள்ளது. கோலி தனது செயல்பாட்டின் மூலம் சிறந்து விளங்குகிறார். அவரது ஆக்ரோஷமான பேட்டிங் பெரும்பாலும் அணிக்கு பக்கபலமாக அமைக்கிறது, மேலும் அவரது வீரர்கள் அதே தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்” என்று தவான் கூறினார்.

தோனி குறித்து ஷிகர் தவான்

மேலும், இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் கீழ் விளையாடியதை தவான் நினைவு கூர்ந்தார். ஐபிஎல் 2024ல், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டனாக இருப்பார். “அவரது கேப்டன்சி எப்போதும் சிறந்தது. தோனி பாய் முடிவெடுக்கும் அவரது உள்ளார்ந்த திறனைப் பற்றி அடிக்கடி பாராட்டப்படுகிறார். அவர் நல்ல முடிவுகளை எடுக்கிறார், குறிப்பாக அவரது கிரிக்கெட் உள்ளுணர்வைப் பின்பற்றுவதில் அவருக்கு ஒரு திறமை உள்ளது. தோனி பாய் தனது திறமையான மேலாண்மை திறன்களுக்காக பிரபலமானவர்” என்று தவான் கூறினார்.

இந்தூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த 2வது டி20 போட்டியில், கோலி வெறும் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். ஐந்து பவுண்டரிகள் உட்பட ஆக்ரோஷமாக ஆடிய கோலி தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.  ஆப்கானிஸ்தான் தொடருக்காக, கோலி மற்றும் ரோஹித் இந்திய டி20 அணியில் மீண்டும் இணைந்துள்ளனர். 2024 ஐசிசி உலக டி20க்கு முன் இந்தியாவின் கடைசி டி20 சர்வதேச தொடர் இது ஆகும். 

மேலும் படிக்க | ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறத் தகுதியற்றவர் – யுவராஜ் சிங் பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *