செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு!

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு, அவர் ஜாமீன் கோரி 2 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் 3-வது முறையாக ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம்.

செந்தில் பாலாஜி

முன்னதாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15-வது முறையாக இம்மாதம் 22-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று உத்தரவிட்டார். குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *