சென்னை: சென்னை நொளம்பூரில் நண்பரை கொலை செய்துவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அமைந்தகரை எம்.எம்.காலனியைச் சேர்ந்தவர் லோகேஷ்(25). மென்பொறியாளரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த திங்கள் அன்று வழக்கம்போல லோகேஷ் வேலைக்குச் சென்றார். ஆனால், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் அமைந்தகரை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

சகோதரிக்கு தகவல்: இந்நிலையில் லோகேஷின் நண்பர் அம்பத்தூரைச் சேர்ந்த வாஞ்சிநாதன்(27) என்பவரும் அதேநாளில் காணாமல் போயிருந்தார். மென்பொறியாளரான இவரும், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறு வனத்தில் வேலை செய்து வந்தார். வாஞ்சிநாதன் காணாமல்போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர், அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்நிலையில் வாஞ்சிநாதன், ‘‘எனக்கு வாழப் பிடிக்கவில்லை, அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்’’ என வாட்ஸ்அப் மூலமாக தனது சகோதரிக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் அனுப்பினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடி யாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

இருப்பிடம் கண்டுபிடிப்பு: அம்பத்தூர் போலீஸார், சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் வாஞ்சிநாதன் செல்போன் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். அதன்படி, நொளம்பூர் பன்னீர் நகரில் உள்ள தனியார் விடுதியில் ஒரு அறையில் வாஞ்சிநாதன் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற அம்பத்தூர் போலீஸார், அந்த அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு வாஞ்சிநாதன் தூக்கிட்டு இறந்த நிலையிலும், லோகேஷ் தரையில் சடலமாக இறந்த நிலையிலும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இருவர் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக நொளம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: லோகேஷும், வாஞ்சிநாதனும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந் துள்ளது. இருவரும் அடிக்கடி தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இவர்களின் உறவு குறித்து அண்மையில் அறிந்த இருவரது பெற்றோரும் கண்டித் துள்ளனர்.

திருமணம் நிச்சயம்: இந்நிலையில், வாஞ்சிநாதனுக்கு அண்மையில் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இது லோகேஷுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரச்சினை வந்துள்ளது. இந்நிலையில் இருவரும் வழக்கம் போல அந்த தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அங்கு லோகேஷ் கழுத்தை துணியால் ஆன ஒரு கயிற்றால் இறுக்கி கொலை செய்த வாஞ்சிநாதன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீ ஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'+divToPrint.innerHTML+''); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); }

var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); }

$('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1;

if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{

} });

$(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200);

var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1182085' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data);

var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/");

if(i>=4){ return false; }

htmlTxt += '

'; }); htmlTxt += '

';

$('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *