இனி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனால், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் எல்லாம், கோயம்பேட்டுக்குப் பதிலாக கிளம்பாக்கத்துக்குச் செல்ல வேண்டும். இதற்காகவென்று, கிளாம்பாக்கத்திலிருந்து ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் செல்லும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருந்தாலும், நடைமுறையில் கோயம்பேடு டு கிளாம்பாக்கம் செல்ல மக்களுக்கு போதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிய விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், “கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வதற்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள்… (1) போதுமானதாக உள்ளது, (2) சிரமமாக உள்ளது, (3) இன்னும் பயன்படுத்தவில்லை” என்று கேள்வியும், அதற்கான விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.