மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதேபோல, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லட்சத்தீவு மிகப்பெரிய பிரச்னையை எதிர்கொண்டது. அந்த நிலத்தின் மக்களும் மிகுந்த நெடுக்கடிக்குள்ளாகினர். ஆனால், `அந்த நெருக்கடியின்போது அந்த மக்களுக்காகவும், அந்த தீவு பூமிக்காகவும் குரல் கொடுக்க முன்வராத திரைப் பிரபலங்கள், இப்போது மட்டும் லட்சத்தீவுக்காகப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது” என்ற ஆதங்கக் குரல்கள் சமூக வலைதளங்களில் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
![லட்சத்தீவு!](https://gumlet.vikatan.com/vikatan%2F2021-06%2F03408623-069b-4730-8f6f-c485a0fb63cd%2F60b7f2ca2474d.jpg?auto=format%2Ccompress)
2021-ம் ஆண்டு, லட்சத்தீவுக்கு எதிராகவும், அங்கு வசிக்கும் மக்களுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய சட்டங்களைக் கொண்டுவந்தார் லட்சத்தீவின் நிர்வாகிய மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருந்த பிரபுல் கோடா படேல். அப்போது, அவருக்கு எதிராக லட்சத்தீவு மக்கள் பெரும் போராட்டங்களில் இறங்கினர். அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி முதல் ஸ்டாலின்வரை குரல் கொடுத்தனர்.