Last Updated : 10 Jan, 2024 07:46 AM
Published : 10 Jan 2024 07:46 AM
Last Updated : 10 Jan 2024 07:46 AM
![](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/10/xlarge/1181538.jpg)
ஜகார்த்தா: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி சுற்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாட்டீல், மெஹுலி கோஷ் ஜோடி இறுதி சுற்றில் 16-10 என்ற கணக்கில் சீனாவின் ஷென் யூஃபான், சூ மிங்ஷுவாய் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
இந்த தொடரில் இந்தியா வெல்லும் 5-வது தங்கப் பதக்கம் இதுவாகும். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் சீமா, ரிதம் சங்க்வான் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
FOLLOW US
தவறவிடாதீர்!