கால் பதிக்க விரும்பும் சீனா:

ஒரு பக்கம் வளர்ச்சி, மறுபக்கம் சர்ச்சை அதிகமாக இருந்தாலும் இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகிறார், ஷேக் ஹசீனா. இருநாடுகளும் சுமார் 4,000 கிலோ மீட்டர் வரையில் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் வரலாற்று, கலாசார ரீதியிலான தொடர்புகளும், வணிக ரீதியிலான உறவுகளும் இருக்கிறது. பிரதமர் மோடியுடன் நல்ல நட்பில் இருக்கிறார், ஷேக் ஹசீனா. இதனால் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார். மேலும் இவரது ஆட்சி காலத்தில்தான் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகள் தீர்ந்தது. மேலும் இந்தியா, தனது ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கு வங்கதேசம் வழியாக சாலை மற்றும் நதி போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. மறுபக்கம் வங்கதேசத்தில் கால் பதிக்க சீனாவும் காய்நகர்த்தி வருகிறது. அந்த நாட்டின் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கம் காட்டுபவர். எனவே இவரது வெற்றி இந்தியாவுக்கு பலனை தரும்” என்கிறார்கள்.

தொடர்ந்து 5வது முறையாக பதவிக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல. ஷேக் ஹசீனா கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடானது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். “வங்கதேசத்தின் ஸ்தாபக தந்தையும் முதல் ஜனாதிபதியுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மூத்த மகள், ஹசீனா. இவர் கடந்த 1980களில் ஜெனரல் ஹுசைன் முஹம்மது எர்ஷாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 1996-ம் ஆண்டு முதல் முறையாக அரசமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு கலீதா ஜியா தலைமையிலான பி.என்.பி.யிடம் தோல்வியடைந்தார். 2006-2008 ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது ​​மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் ஹசீனா கைது செய்யப்பட்டார். பின்னர் 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெற்ற வெற்றி தற்போது வரையில் தொடர்கிறது. முன்னதாக 1975-ம் ஆண்டு அவரது கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரி தவிர முழு குடும்பமும் கொல்லப்பட்டது.

கொல்லப்பட்ட குடும்பமும்… அசுர வளர்ச்சியும்…

அப்போது ஹசீனா, கணவர் வசேத் மற்றும் சகோதரி ரெஹானா ஆகியோர் ஐரோப்பாவிற்கு சென்றிருந்தனர். அப்போது மேற்கு ஜெர்மனிக்கான வங்கதேச தூதரின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு நாடுகடத்தப்பட்டனர். இதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் உதவி கோரினர். அப்போது அந்த நாட்டில் நடத்த ஜியாவுர் ரஹ்மானின் ராணுவ ஆட்சியில் வங்கதேசத்திற்குள் நுழைய ஹசீனாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1981-ம் ஆண்டு அவாமி லீக்கின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் சொந்த நாட்டுக்கு திரும்பினார். அதன் பிறகு பல்வேறு போராட்டங்களை கடந்து நாட்டின் 5 வது பிரதமராக தொடர்கிறார். இதற்கு மக்களின் நலனுக்காக அவர் போராடுவதே காரணம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *