கள்ளக்குறிச்சி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த கன மழையால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிடும் பொருட்டு போர்வைகள், சேலை, கைலி, துண்டு, சர்க்கரை, ரவை, கோதுமை, அரிசி, பிஸ்கெட், சேமியா, மஞ்சள்துாள், எண்ணெய், பால் பவுடர், மெழுவர்த்திகள், நாப்கின் மற்றும் மருந்துகள் என மொத்தம் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 2 லாரிகள் மூலம் கலெக்டர் ஷ்ரவன்குமார் அனுப்பி வைத்தார்.
டி.ஆர்.ஓ., சத்தியாநாரயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
![Dinamalar iPaper Combo](https://stat.dinamalar.com/new/2022/images/ipaper/newspaper-ipaper-combo-detailf.jpg)