ராமநாதபுரம்: பாம்பனைச் சேர்ந்த 22 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த பிரான்சிஸ் கேசியர் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் 10 மீனவர்களும், ராஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் 12 பேரும் மீன்பிடிக்கச் சென்றனர்.