உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை காண நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வழங்கியுள்ளார். முன்னதாக இந்த கோல்டன் டிக்கெட்டுகள் அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் விளையாடுகின்றன. வரலாற்றில் முதன் முறையாக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் இழந்தது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கு அணிகள் ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு பிசிசிஐ செயலர் உலகக்கோப்பையை காண்தற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி கவுரவித்துள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று லைக்ஸ்களை குவித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி ஐசிசி கோப்பை எதையும் கைப்பற்றாத நிலையில் இந்த உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி பட்டத்தை வென்றது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *