சென்னை: சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். இந்தச் சூழலில் அவரது தேர்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
37 வயதான அஸ்வின், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சீனியர் வீரராக விளையாடி வருகிறார். அதோடு ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் கிரிக்கெட்டிலும் விளையாடி இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடி இருந்தார். இந்தச் சூழலில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.