இந்தநிலையில் வருடம் தோறும், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்திருக்கும் 60 படிகளுக்கும் திருப்படி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, தமிழ்ப் புத்தாண்டான இன்று திருப்படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

படிகளில், மஞ்சள் தடவி அதில் பொட்டு பூ, பழம் வைத்து தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதில், ஸ்ரீசோபகிருது ஆண்டுக்குரிய படிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டில் மழை வளம் பெருக வேண்டும். இயற்கை செழித்து, வறட்சி நீங்கி விவசாயம் பெருகி நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யப்பட்டது.