ஹரிஷ் பிரபு இயக்கத்தில் நாளை திரைக்கு வரும் ‘திருவின் குரல்’ படத்தில், முதல்முறையாக பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்துள்ளார் அருள்நிதி. அவரது தந்தையாக பாரதிராஜா நடித்துள்ளார். இப்படம் குறித்து அருள்நிதி கூறுகையில், ‘இதற்கு முன்பு சில சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் நடித்துள்ளேன். வித்தியாசமான பேமிலி சென்டிமென்ட் கதைக்கு காத்திருந்தபோது, ஹரிஷ் பிரபு சொன்ன கதை என்னை பெரிதும் கவர்ந்தது. ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. எனது ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாத தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது நடக்கும் சம்பவங்களே கதை. இது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாகும். அடுத்து வெங்கி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதற்கு இயக்குனர் பாண்டிராஜ் கதை, திரைக்கதை எழுதுகிறார். இது விவசாயம் சம்பந்தப்பட்ட கதை. தவிர, ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘டிமான்ட்டி காலனி’ 2ம் பாகம், ‘அடங்க மறு’ படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் இணை இயக்குனர் விஜய் இயக்கும் படம், இன்னாசி பாண்டியன் இயக்கும் படம் என்று, நடிப்பில் மிகவும் பிசியாக இருக்கிறேன். மற்றபடி ‘வம்சம்’ படத்தின் 2ம் பாகத்தில் நான் நடிப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறானவை’ என்றார்.

The post வம்சம் 2ம் பாகத்தில் நான் நடிக்கவில்லை: அருள்நிதி விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images – Cinema.dinakaran.com.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *