Loading

மதுரை: கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி முருகன் கோயில் குடமுழுக்கு ஜன. 27-ல் நடைபெறுகிறது. முருகன் தமிழ் கடவுள். இதனால் குடமுழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓதப்பட வேண்டும். தமிழகத்தில் கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை 2020-ல் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பழநி முருகன் கோயிலுக்கும் பொருந்தும். எனவே பழநி முருகன் கோயில் குட முழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓத உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *