இம்மாத இறுதியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்பதால் பேருந்து சேவைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சிறிது காலம் முற்றிலும் பேருந்து சேவை நிறுத்துவது குறித்தும், தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.