சென்னை:

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 15,16 ஆகிய தேதிகளில் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *