சென்னை:
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாம் அலை தற்போது விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில். சென்னை பெருநகரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியான காவல் கூடுதல் ஆணையர் ஒருவர் உட்பட 70 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுத் தனிமையில் உள்ள அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சிகிச்சைக்கான ஏற்பாடுகள், உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் பெருநகர காவல்துறை முன்னெடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்குமாறு காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,